ADVERTISEMENT
bharathiar life history in Tamil

பாரதியார் முழு வாழ்க்கை வரலாறு | bharathiar life history in Tamil

பாரதியார் முழு வாழ்க்கை வரலாறு | bharathiar Life history in Tamil

bharathiar life history in Tamil

பாரதியார் வாழ்க்கை வரலாறு | mahakavi bharathiyar history in Tamil

bharathiar life history in Tamil: பாரதியார் இவர் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல தற்போது கவிதை எழுதக்கூடிய கலைஞர்களின் முன்னோடி இவர்தான். மேலும் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய பெண் விடுதலை, தீண்டாமை, தமிழர் நலன் மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றிற்காக போராடிய ஒரு உத்தம கவிஞர். எண்ணற்ற மொழிகளை கற்று வைத்திருந்த பாரதியார் தமிழ் மொழியைப் பற்றி “யாம் அறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் வேறு எதுவும் இல்லை” என்று தமிழ் மொழியை பெருமைப்படுத்தியுள்ளார்.

பாரதியார் வாழ்க்கை வரலாறு:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரா அரண்மனையில் பணியாற்றி வந்த சின்னசாமி மற்றும் இலக்குமி அம்மா என்பவருக்கு 1882 ஆம் ஆண்டு பாரதியார் மகனாக பிறந்தார். மேலும் இவர்கள் பெற்றோர் இவருக்கு இளமையில் பாரதியார் என்னும் பெயர் வைத்தனர்.

பாரதியாரின் இளமை பருவம்:

என்னதான் சுப்பிரமணி என்ற பெயர் பாரதியார் வைத்திருந்தாலும் வீட்டில் அவரை செல்லமாக சுப்பையா என்று அழைக்க தொடங்கினர். மேலும் பாரதியாருக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது அவருடைய தாயாரான இலக்குமி அம்மையார் உடல் நலம் சரியில்லாமல் இறந்து போனார். இவரின் மறைவுக்கு பின்னர் பாரதியாரின் தாத்தாவான ராமசாமி அய்யர் இவருக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

பாரதியாருக்கு மகாகவி என்னும் பட்டம்:

subramaniya bharathiyar history in tamil: சிறுவயதில் பள்ளிக்கு செல்லாமல் அவருடைய தாத்தாவின் உதவியின் மூலம் தமிழை கற்றுக்கொண்ட பாரதியார் அவ்வப்போது சின்னஞ்சிறு கவிதை துணுக்குகளை எழுதியும் அதனை மற்றொருவரிடம் கூறியும் வந்துள்ளார். இதனை கவனித்து வந்த பாரதியாரின் தாத்தா பாரதியார் வருங்காலத்தில் மிகப்பெரிய கவிஞனாக வருவார் என்று தன் மகனான சின்ன சாமியிடம் கூறிவந்துள்ளார்.

ஆனால் அவரோ பாரதியார் கவிஞன் ஆக வேண்டும் என்று நான் விரும்பவில்லை அவன் மேல்படிப்பு படித்து என்னைப் போன்ற இந்த அரண்மனையில் ஒரு மிகப்பெரிய வேலைக்கு வர வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது என்றார். மேலும் மேலும் பாரதியாரின் தந்தை சுப்பிரமணி அவர்கள் எட்டயபுர அரண்மனையில் இருக்கும் பொழுது அவ்வப்போது அங்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ADVERTISEMENT

அப்பொழுது அவர் எழுதிய சிறு சிறு கவிதைகள் அங்குள்ள அரண்மனை அவர்களிடம் படித்துக் காட்டியுள்ளார். அப்போது எட்டயபுரத்தில் உள்ள கவிஞர்கள் பாரதியாரின் கவிப்புலமையை கண்டு அவருக்கு பாரதி என்னும் பட்டத்தை வழங்கினார்கள். மேலும் அப்பட்டத்தை பெறும் பொழுது பாரதியாருக்கு 11 வயது தான் இருந்தது இவ்வளவு சிறு வயதிலேயே பாரதியார் தம் கவி பாடும் திறமையை வளர்த்துக் கொண்டார்.

Bharathiar history full details in Tamil

பாரதியார் இயற்பெயர் – சுப்பிரமணியம் (எ) சுப்பையா

பாரதியார் பிறந்த ஊர் – தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் எட்டயபுரம்

பாரதியார் பிறந்த வருடம் – 11-12-1882

பாரதியார் பெற்றோர்கள் பெயர் – சின்னச்சாமி அய்யர் மற்றும் லட்சுமி அம்மாள்

பாரதியார் திருமணம் செய்த வருடம் – 1897

ADVERTISEMENT

பாரதியார் மனைவியின் பெயர் – செல்லம்மாள்

பாரதியாரின் குழந்தைகள் பெயர் – சகுந்தலா மற்றும் தங்கம்மாள்

பாரதியாருக்கு வழங்கும் வேறு பெயர்கள் – மகாகவி, மக்கள் கவி, உலக கவி, தேசியக் கவி, காளிதாசன், சுப்பையா, சுப்பிரமணியன், பாரதியார் மற்றும் பாரதி

பாரதியார் பாரதி பட்டம் பெற்ற ஆண்டு – 1893

பாரதியார் எழுதிய நூல்கள் – கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பாப்பா பாடல் மற்றும் பல

பாரதியார் சிலை உள்ள இடம் – 7 அடி உயர சிலை எட்டயபுரம் கல்லூரியில்

ADVERTISEMENT

பாரதியார் மணிமண்டபம் இருக்கும் இடம் – திருநெல்வேலியில் உள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில்

பாரதியார் நடத்தி வந்த பத்திரிகையின் பெயர்கள் – கர்மயோகி, தர்மம், சூரிய உதயம் மற்றும் இந்தியா

பாரதியார் தந்தை இறந்த வருடம் – 1898

பாரதியார் தாயார் இறந்த வருடம் – 1887

பாரதியார் இறந்த வருடம் – 11-09-1921

பாரதியார் திருமண வாழ்க்கை :

bharathiar life history in Tamil: அக்காலத்தில் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்ததால் பாரதியாருக்கு 14 வயது இருக்கும் பொழுது 7 வயது உடைய பெண்ணான செல்லம்மா என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள்.

ADVERTISEMENT

மேலும், அந்த திருமணத்தில் பாரதியாருக்கு மட்டுமில்லாமல் பாரதியாரின் தங்கைக்கும் மற்றும் பாரதியார் திருமணம் செய்யும் செல்லம்மாள் என்பவரின் தங்கைக்கும் சேர்த்து ஒரே மேடையில் மூன்று திருமணங்கள் நடந்தது.

பாரதியாரின் தந்தை இறப்பு:

bharathiar life history in Tamil: என்னதான் வாழ்க்கை ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருந்தாலும் ஒரு சில சிற்பங்கள் ஏற்படும் என்பதைப் போல பள்ளி படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த பாரதியார் மீளா துயரத்தில் வாடினார். இதற்குக் காரணம் அவருடைய தந்தை மறைவு தான்.

பாரதியார் தந்தையின் மறைவுக்கு பின்னர் அவருடைய இறுதி சடங்கை முடிப்பதற்காக காசிக்கு சென்றிருந்தார். அப்பொழுது காசியில் உள்ள தன்னுடைய சகோதரியின் குடும்பத்தோடு சேர்ந்து வசித்து வந்தார்.

பாரதியார் கல்லூரி படிப்பு:

காசியில் இருந்தபடியே அங்குள்ள ஜெய நாராயணன் என்ற கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலம் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் கல்வி பயின்றார். அக்காலத்தில் சுதந்திரப் போராட்டம் மற்றும் சுதந்திரப் போராட்ட பேச்சுக்கள் அதிக அளவில் நடைபெற்றதால் பாரதியார் ஆங்காங்கே சுதந்திரப் போராட்ட வீரர்கள் பேசும் பேச்சுக்களையும் கேட்டு வந்துள்ளார்.

பாரதியாருக்கு ஆங்கிலேயர்களின் மீதான வெறுப்பு:

bharathiar life history in Tamil: எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேச்சை கேட்ட பாரதியார் அப்பொழுது அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் இழிவான ஆட்சி நிலையை கண்டு மிகவும் மனம் வருந்தினார். தமிழன் அவருடைய வீரத்தை வளர்த்துக் கொள்ளும் விதமாக மிகப்பெரிய மீசையையும் மற்றும் அவருடைய தலையில் தலப்பாகையை அணியும் பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டார். மேலும் காசியில் இருந்த பொழுது தம்முடைய கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு மீண்டும் எட்டயபுரம் சென்றார்.

பாரதியார் கற்று அறிந்த மொழிகள்:

பாரதியார் இளமை பருவத்தில் தந்தை மற்றும் தாத்தாவின் உதவியுடன் தமிழ் கணிதம் ஆங்கிலம் ஆகிய மூன்றையும் எளிமையாக கற்றுத் தெரிந்தார். மேலும் காசியில் சென்று தம்முடைய அத்தை வீட்டில் இருந்து கொண்டு அங்குள்ள அலகாபாத் பல்கலைக்கழக கல்லூரியில் சமஸ்கிருதம் இந்தி மொழியையும் கற்றார். மேலும் இந்த மொழிகள் மட்டுமில்லாமல் பிரெஞ்சு இந்தி வடமொழி ஆகிய 14 க்கும் மேற்பட்ட மொழிகளை தம்முடைய இளமை பருவத்திலேயே பாரதியார் கற்று வைத்திருந்தார்.

ADVERTISEMENT

பாரதியார் செய்த பணிகள்:

bharathiar life history in Tamil: காசியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பின்னர் அவருடைய சொந்த ஊரான எட்டயபுரத்திற்கு சென்று அங்குள்ள அரண்மனையில் வேலை செய்ய தொடங்கினார். அப்போது பாரதியார் அங்குள்ள எட்டயபுர ஜமீன்தருக்கு தமிழ் பத்திரிகைகளை வாசித்து காட்டுவது மற்றும் நாட்டு நடப்புகளில் ஏற்படும் விவரங்களை விளக்கமாக கூறுவது, மேலும் ஆங்கிலத்தில் உள்ள கவிதைகள் மற்றும் செய்திகளை தமிழில் மொழிபெயர்த்து கூறுவது என்ற சிறிய சிறிய வேலைகளை பாரதியார் செய்து வந்துள்ளார்.

பாரதியாரின் பணி நீக்கம்:

எட்டயபுரா அரண்மனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது சர்வஜன மித்திரன் என்ற பத்திரிகை ஒன்று வெளியாகி இருந்தது. பாரதியாரின் புலமையைக் கண்ட அந்த பத்திரிகையா ஆசிரியர் பாரதியாரிடம் ஒரு சிறந்த கட்டுரை எழுதி தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த பாரதியார், பணக்காரர்கள் ஏழைகளை எவ்வாறு வேதனைப்படுத்துகின்றனர் என்ற தலைப்பில் ஒரு மிகப்பெரிய கட்டுரை எழுதி அதனை வெளியிடவும் செய்தார். இதனை படித்த எட்டயபுரம் ஜமீன்தார் தன்னை பற்றி விமர்சித்து தான் பாரதியார் இந்த கட்டுரையை எழுதி இருப்பதாக நினைத்து, பாரதியார் வேலையை விட்டு நிறுத்தினார்.

பாரதியார் ஆசிரியர் பணியில் சேருதல்:

• எட்டயபுரம் அரண்மனையில் இருந்து வேலையை விட்ட பாரதியார் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார்.

• மேலும் அதே சமயத்தில் பாரதியாரின் மனைவியான செல்லம்மாள் கர்ப்பமுற்று இருந்தார். இதனால் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்ற பொழுது பாரதியாரின் நண்பர்கள் சிலர் மதுரைக்கு வேலைக்கு வரும்படி அழைத்தனர்.

• மதுரைக்குச் சென்ற பாரதியார் அங்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று வேலை தேடத் தொடங்கினார்.

ADVERTISEMENT

• அப்பொழுது மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் அரசன் சண்முகனார் என்ற தமிழ் ஆசிரியர் உடல் நலம் குறைவு காரணமாக மூன்று மாதங்கள் விடுமுறையில் இருந்தார்.

• அவர் மூன்று மாதம் விடுமுறைகள் இருந்ததால் அவர் இருந்த ஆசிரியர் பணி காலியாக இருந்துள்ளது. பாரதியார் நண்பர்கள் உதவியுடன் அந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

• மேலும் அந்தப் பள்ளிக்கூடத்தில் பாரதியார் அவர்கள் சரியாக 101 நாட்கள் வரை தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

பாரதியாரும் விடுதலைப் போராட்டமும்:

bharathiar life history in Tamil: பாரதியாருக்கு சுதந்திர போராட்டத்தில் இருந்த ஆர்வம் காரணமாக எண்ணற்ற சுதந்திரப் போராட்டத் தலைவர்களுடன் நட்பு ஏற்படும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக சொல்லப்போனால் வா வ உ சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் நெருக்கமான நட்பு கிடைத்தது.

அதேசமயம் 1905 ஆம் ஆண்டு வாக்கில் “சக்கரவர்த்தினி” என்ற இதழைத் தொடங்கி அதில் வந்தே மாதரம் என்ற தலைப்பில் எண்ணற்ற பாடல்களை எழுதி அதனை மக்களுக்கு வினியோகம் செய்து வந்தார். பின்னர் 1906 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு பாரதியாருக்கு கிடைத்தது.

அப்போது அங்கு பேசிய சுவாமி விவேகானந்தரின் சீடர்களான நிவேதிதா மற்றும் தேவி ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பல்வேறு பத்திரிகைகளை தொடங்கி இந்திய சுதந்திர போராட்ட முழக்கத்தை தம்முடைய எழுத்துக்களின் மூலமாக அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.

ADVERTISEMENT

பின்னர் 197 ஆம் ஆண்டு “இந்தியா” என்ற வார இதழையும் “பாலா பாரதம்” என்ற ஆங்கில இதழையும் தம்முடைய மேற்பார்வையில் நடத்தி வந்தார். பாரதியார் மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதியார் தீவிரமாக இறங்கத் தொடங்கினார்.

சுதந்திரப் போராட்ட மற்றும் விடுதலை உணர்வு ஆகியவற்றை “இந்தியா” என்ற பத்திரிகையின் வாயிலாக மக்களுக்கு பல்வேறு செய்திகளை பரப்ப தொடங்கினார். மேலும் சுதந்திர போராட்டம் சம்பந்தமாக பாரதியார் எழுதிய பாடல்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் தீயாய் பரவத் தொடங்கினார்.

பாரதியார் எழுதிய சுதந்திரப் போராட்ட உணர்வு கவிதைகள்:

• கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்.

• விடுதலை விடுதலை விடுதலை என்றும் என்று தனியும் இந்த சுதந்திர தாகம்.

• ஆடுவோமே பல்லு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்

• பாருக்குள்ளே பாரு நல்லதொரு நாடு எங்கள் பாரத நாடு

ADVERTISEMENT

பாரதியார் எழுதிய வந்தே மாதரம் பாடல்:

bharathiar life history in Tamil: 1905 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆங்கிலேய அரசன் வங்காளதேசத்தை இரண்டு மாகாணங்களாக பிரித்தது. இந்த பிரிவினைக்கு எதிராக எண்ணற்ற கண்டன குரல்கள் நாடு முழுவதும் தொடங்கினர். மேலும் பாரதியாரும் தம்முடைய பங்கிற்கு கடுமையான சொற்களால் ஆங்கிலேய அரசை விமர்சித்து வந்தார்.

அப்பொழுது ஆங்கிலேயர்களுக்கு எதிராக வந்தே மாதரம் என்னும் பாடல் நாடு முழுவதும் ஒழிக்க தொடங்கியது. மேலும் இந்தப் பாடலை பாரதியார் அவர்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து அதனை சக்கரவர்த்தினி எனும் இதழில் மூலம் வெளியிட்டார். பாரதியாரின் இந்த வந்தே மாதரம் பாடல் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஒழிக்க தொடங்கியது.

பாரதியார் வ.உ.சி யை சந்தித்தல்:

இந்தியா முழுவதும் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் களம் இறங்கிய நிலையில். வ உ சி அவர்கள் நான் வெளிநாட்டுக்கு சென்று கப்பல் வாங்கப் போகிறேன் என்று கிளம்பிய பொழுது பாரதியார் எழுதிய பத்திரிகைகள் மற்றும் கட்டுரைகளை அனைத்தையும் படித்து பாரதியார் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக பாரதியாரும் வா.உ.சி. யும் ஒன்றாக சந்தித்துக் கொண்டார்கள்.

மேலும் இருவரும் ஒரே சந்திப்பில் மிகப்பெரிய நண்பர்களாக மாறி சுதந்திரப் போராட்டத்தில் எவ்வாறு ஈடுபட வேண்டும் எவ்வாறு அதனை வழி நடத்த வேண்டும் என்ற சிந்திக்க தொடங்கினார். மேலும் வ உ சிதம்பரனார் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தான் ஒரு கப்பலை வாங்க வேண்டும் என்றும் அதனை தன் ஓட்டி காட்டுவேன் என்றும் சபதம் மேற்கொண்டு அதனை நிறைவேற்றியும் காட்டினார் வ உ சிதம்பரனார்.

பாரதியார் பாண்டிச்சேரிக்கு தப்பி செல்லுதல்:

பாரதியார் எழுத்துக்கள் மற்றும் அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் ஆங்கிலேயர்களின் பார்வைக்கு வந்தது. மேலும் அவர் எழுதிய அனைத்து கட்டுரைகளும் ஆங்கிலேய அரசிற்கு எதிரானதாக இருந்ததால் பாரதியாரை தேச விரோத குற்றவாளி என்று அறிவித்து அவரை கைது செய்ய முடிவு செய்தனர்.

இதனை அறிந்த இந்திய இதழின் பத்திரிக்கை நிறுவனர் பாரதியாருக்கு பதிலாக சீனிவாசன் என்பவரை பத்திரிகை ஆசிரியராக நியமித்தார். அப்பொழுது அந்த பத்திரிக்கை ஆசிரியர் பாரதியார் தான் என்ற எண்ணி அவரை கைது செய்த வந்த பொழுது போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏனென்றால் அங்கு இருந்ததோ சீனிவாசன்.

ADVERTISEMENT

மேலும் ஆங்கிலேயர்கள் வேறு வழியில்லாமல் பாரதியாரை விட்டு விட்டு சீனிவாசனை அளித்து சென்றனர். ஆனால் பாரதியாரை எந்த நேரமும் கைது செய்யலாம் என்ற செய்தி அனைவருக்கும் பரப்பவே பாரதியாரின் நண்பர்கள் அவரை புதுச்சேரிக்கு தப்பி செல்லும்படி கூறியுள்ளனர். பின்னர் பாரதியார் புதுச்சேரிக்கு சென்று அங்கு குப்புசாமி அய்யர் என்பவர் வீட்டில் சிறிது காலம் வசித்து வந்தார்.

புதுச்சேரியில் பரவிய பாரதியாரின் கவிதைகள்:

புதுச்சேரியில் ஐயங்கார் வீட்டில் தங்கி இருந்ததை போலீசார் கண்டறிந்து விட்டனர். ஆனால் பாண்டிச்சேரியில் ப்ரோடீஸ்காரர்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் தமிழக போலீசாரால் அவரை கைது செய்ய முடியவில்லை. இருந்தாலும் வீட்டின் உரிமையாளரான ஐயரை மிரட்டி பாரதியாரை இங்கு தங்க வைக்கக் கூடாது என்று மிரட்ட தொடங்கினார்.

ஆரம்பத்தில் இந்தியா என்ற பத்திரிக்கை பாண்டிச்சேரியில் வைத்து நடத்த வேண்டும் என்ற ஓர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனைப் போலவே இந்தியா என்ற பத்திரிகையின் நிறுவனர் பத்திரிக்கை அடிக்கக்கூடிய மை மற்றும் இயந்திரங்கள் ஆகியவை அனைத்தும் பெரும் போராட்டங்களுடன் பாண்டிச்சேரி கொண்டுவரந்து இறக்கினார். மீண்டும் இந்தியா என்ற பத்திரிக்கை பாண்டிச்சேரியில் உதயமாக தொடங்கியது.

அப்பொழுது வ உ சிதம்பரனார் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியினால் கைது செய்யப்பட்டு சிறையில் செக்கிழக்கும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். இதனை அறிந்த பாரதியார் தம்முடைய கண்ணீரின் வேதனைகள் அனைத்தையும் இந்தியா பத்திரிக்கையின் மூலம் நாட்டு மக்களுக்கு வெளியிட தொடங்கினார்.

மேலும் பல எண்ணற்ற பிரச்சனைகள் காரணமாக இந்தியா பத்திரிகையை நிரந்தரமாக மூடப்பட்டது.

பாரதியார் ஆங்கிலேயர்களை கைது செய்யப்படுதல்:

19 18 ஆம் ஆண்டுக்கு பிறகு பாண்டிச்சேரியில் இருந்து பாரதியார் தமிழகத்திற்குள் நுழைந்த உடனேயே தமிழக காவல்துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டு 34 நாட்கள் வரை சிறையில் சித்திரவதை செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

பாரதியார் சிறை சென்று திரும்பிய பின்னர் பாரதியாரின் மனைவி ஊரான கடையம் என்ற ஊரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே வசித்து வந்தார்.

வறுமையின் பிடியில் பாரதியார்:

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை விரைந்து அளித்திடுவோமே” என்ற பாரதியாரின் மனம் நந்து கவிதை எழுத சில குறிப்பிட்ட விஷயங்கள் காரணமாக இருந்தன.

• தன்னுடைய மனைவியுடன் இருந்த பாரதியார் அந்த ஊரில் எந்த ஒரு வேலையும் இல்லாததால் மிகப் பெரும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு வறுமை இழந்து தவித்தார்.

• தான் இருக்கும் நிலையை ஒரு துண்டு சீட்டில் எழுதி அதனை எட்டயபுர அரண்மனை சமஸ்தானத்திற்கு அனுப்பி வைத்தார் பாரதியார். ஆனால் அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலோ அல்லது உதவியுமே அவருக்கு கிடைக்கவில்லை.

• ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு என்று இருந்த அந்த காலகட்டத்தில் தமக்கு உணவு இல்லை என்றாலும் பரவாயில்லை என்று கருதி காக்கைகள் மற்றும் குருவிகள் கிளிகள் ஆகியவற்றிற்கு தம்முடைய மனைவி சமைக்க வைத்திருந்த சிறிதளவு தானியங்களை கூட அவற்றிற்கு வழங்கினார்.

• இந்த வறுமையே பாரதியாரை மேலே சொல்லப்பட்டுள்ள கவிதை எழுதுவதற்கு தூண்டுதலாக இருந்தது.

ADVERTISEMENT

பாரதியாரின் தன்மானம்:

எண்ணற்ற வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த பாரதியார். கொடுப்பவர் கை மேலேயும் வாங்குபவர்கள் கீழேயும் இருக்கும் என்ற இலக்கணத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியோடு இருந்தார்.

பாரதியாரின் கவி பாடும் புலமையை கண்ட அவரது நண்பர் ஒருவர், பாரதியாருக்கு பரிசு வழங்கும் பொருட்டு ஒரு தட்டில் பணத்தையும் அதனுடன் சேர்த்து பட்டால் செய்யப்பட்ட ஆடைகளையும் வைத்து கொடுத்தாலும். ஆனால் பாரதியாரோ அதனை தட்டோடு வாங்காமல் தட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் மேலே இருக்கும் பொருட்களை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று தட்டின் மேல் உள்ள பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டார்.

இதற்கான காரணம் என்னவென்றால் தம்முடைய கையானது எந்த ஒரு சூழ்நிலைக்காகவும் யாரிடமும் தாழ்த்தி விடக்கூடாது என்பதால் பாரதியார் இச்செயலை செய்ததாக கூறப்படுகிறது.

தேசத்தந்தை காந்தியை சந்தித்த பாரதியார்:

bharathiar life history in Tamil: இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தம்முடைய மனைவியின் ஊரில் இருந்த பாரதியார் 1919 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுதந்திர போராட்டத்தில் நேரடியாக இறங்குவதற்காக சென்னைக்கு வந்தார். அப்பொழுது சென்னையில் இருக்கும் பொழுது ராஜாஜியின் வீட்டில் ஒரு முறை தங்கி இருந்த காந்தியை பாரதியார் சந்தித்தார்.

பாரதியார் தம்முடைய வாழ்நாளில் முதன்முறையாக காந்தி மற்றும் ராஜாஜி ஆகியவரை சந்தித்தது முதலும் கடைசியுமாக அமைந்தது.

மேலும் விடுதலைப் போராட்ட காலங்களில் எண்ணற்ற தேசிய உணர்வு நிறைந்த கவிதைகளை மக்களுக்கு படித்ததால் பாரதியார் தேசிய கவி என்று அனைவராலும் போற்றப்பட்டார் மேலும் இவர் சுதேசி மித்திரன் என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராக 19 4ஆம் ஆண்டு முதல் 196 ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே பாரதியார் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்ற விடுதலைப் போராட்ட உணர்வை தூண்டக்கூடிய கவிதையை எழுதி அதனை மக்களிடம் கொண்டும் சேர்த்துள்ளார்.

பாரதியாரின் இறப்பு :

bharathiar life history in Tamil: பாரதியார் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்பொழுது யாரும் எதிர்பாராதமாக கோவிலில் இருந்த யானை பாரதியாரை பலமாக தாக்கியது. இதனால் பாலு இந்தியரின் உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டு நோய்வாய்ப்பட்டு சிறிது காலங்கள் வீட்டிலேயே இருந்தார்.

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அதிகாலையில் சுமார் ஒன்றரை மணி இருக்கும் அந்த சமயத்தில் பாரதியாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் அதே சமயத்தில் பாரதியாரும் இறந்து போனார்.

பாரதியாரின் இறுதி சடங்கு:

bharathiar life history in Tamil: பாரதியார் இறக்கும்பொழுது அவருக்கு வயது 38 தான் இருந்தது. மேலும் அவரின் எடை சுமார் 45 கிலோவாக இருந்தது அந்த அளவிற்கு மெலிந்து போய் காணப்பட்டிருந்தார். மேலும் பாரதியார் இருந்த வீட்டிற்கு அருகில் கோவில் ஒன்று இருந்ததால் அவரின் உடலை உடனடியாக அதனை விட்டு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

காலை 8 மணி அளவில் திருவல்லிக்கேணியில் உள்ள கிருஷ்ணம்பேட்டை இல் அமைந்துள்ள மயானத்திற்கு பாரதியாரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. பாரதியாருக்கு இரண்டு மகள்கள் மட்டுமே உள்ளனர் ஆண் வாரிசு யாரும் கிடையாததால் அவருக்கு யார் கொள்ளி வைப்பது என்ற பிரச்சினை இருந்தது. இதனை சரி செய்யும் விதமாக பாரதியாரின் சொந்தக்காரரான ஹர ஹர சர்மா என்பவர் அவருக்கு சொல்லி வைத்தார்.

பாரதியாரின் இறந்த செய்தி கேட்ட எண்ணற்றோர் அங்கு வருவதற்குள் அவரின் அனைத்து சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் பாரதியாரின் இறுதி சடங்கில் 14 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

ADVERTISEMENT

பாரதியார் செய்த புரட்சிகள்:

• பாரதியார் பெண்களின் விடுதலைக்காக எண்ணற்ற பாடல்கள் மற்றும் பெண்களின் கல்வி முன்னேற்றம் குறித்தும் பல்வேறு வகையான கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.

• மேலும் சாதி மதம் ஆகியவற்றை எதிர்க்கும் விதமாக பல்வேறு வகையான கட்டுரைகளையும் பாரதியார் எழுதியுள்ளார்.

• உலகில் பிறந்த அனைத்து உயிர்களும் சமமே என்ற நோக்கத்தோடு தாம் அணிந்திருந்த பூணூலை கழற்றி தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு அதனை அணிவித்து மிகப்பெரும் புரட்சி செய்தார்.

• பாரதியார் தம்முடைய வாழ்நாளில் ஒரு ஆசிரியராக, கவிஞராக, பத்திரிக்கையாளராக, சிந்தனை சிற்பியாக, ஒரு கழகத்தை நடத்துபவராக மற்றும் நாட்டு விடுதலைக்காக எண்ணற்ற பாடல்களை எழுதியவராக இருந்தார்.

பாரதியார் எழுதிய முப்பெரும் காவியங்கள்:

• குயில் பாட்டு

• பாஞ்சாலி சபதம்

ADVERTISEMENT

• கண்ணன் பாட்டு

மேலும் பல தலைவர்களின் வரலாறை படியுங்கள்

 

எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
திருவள்ளூர் வாழ்க்கை வரலாறு
காமராஜர் வாழ்க்கை வரலாறு
பாரதிதாசன் வாழ்க்கை பற்றிய முழு தகவல்கள்
வேலு நாச்சியார் பற்றிய முழு தகவல்கள்
காந்தி பற்றிய முழு தகவல்கள்

 

Leave a Reply