ADVERTISEMENT
பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம் – Patti Vaithiyam

பாட்டி வைத்தியம் – Patti Vaithiyam

 

பாட்டி வைத்தியம்

 

பாட்டி வைத்தியம் || Patti vaithiyam in english:

 Patti Vaithiyam:-  உடலில் ஏராளமான பிரச்சனைகளும் , நோய்களும் ஏற்படுகிறது. இதற்கு, தற்போது உள்ள காலகட்டங்களில் ஆங்கில மருந்துகள் அனைத்தும் விரைவில் பலனை தருவதில்லை. இதற்கு பதிலாக நம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளையும் நோய்களையும் குணப்படுத்தலாம்.

பாட்டி வைத்தியம் என்றால் என்ன?

இதனை பண்டைய காலங்களில் பாட்டி வைத்திய முறை என்றும் கூறுவார்கள். ஏனென்றால், பண்டைய காலகட்டங்களில் வாழ்ந்த பாட்டிகளுக்கு ஒரு மூலிகை வைத்து எந்த நோயை குணப்படுத்தலாம் என்று நன்றாக தெரியும். அதுபோன்று அனைவருக்கும் பயன்படக்கூடிய சில பாட்டி வைத்திய முறைகளை இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்.

பாட்டி வைத்தியம் pdf || நாட்டு வைத்தியம் pdf:

1) பல் வலி சரியாக:

* சிலருக்கு கடுமையான பல் வலி ஏற்பட்டு பல் துலக்கும் பொழுது ஈறுகளில் இரத்த கசிவு, தசை வீக்கம் போன்ற பிரச்சனையில் வேதனைப்படுவார்கள். அவர்கள் மிளகு,துளசி இலை, சிறிதளவு உப்பு இவை மூன்றையும் பல்வலி உள்ள இடத்தில் நன்றாக வைத்து அழுத்தி தேய்த்தால் பல் வலி சரியாகிவிடும்.

ADVERTISEMENT

* புதினா விதையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்றால் பல்லில் உண்டாகும் கூச்சம் நீங்கும்.

2) உடல் எடையை குறைக்க:

சிறிதளவு மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு தேன் இவை அனைத்தையும் ஒன்றாக கொதிக்க வைத்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகான தோற்றத்துடன் காணப்படுவீர்கள்.

3) பாட்டி வைத்தியம் இருமல் || தீராத இருமல் குணமடைய:

 Patti Vaithiyam:-  சிலருக்கு சளி இல்லாமல் வரட்டு இருமல் பிரச்சனையில் அவதிப்படுவார்கள். இவர்கள் தினசரி மூன்று கப் அளவு தண்ணீரில் சீரகம், மிளகு, மஞ்சள் தூள் போன்றவற்றையெல்லாம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

அதன்பிறகு, அதனை 3-வேளையும் குடித்து வந்தால் கடுமையான இருமல் குணமடையும். இந்த கொதிக்க வைத்த நீரை குழந்தைகள் கூட குடிக்கலாம்.

4) முடி நன்றாக வளர:

* ஒரு கைப்பிடி கருவேப்பிலை கொத்தை தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வதை தடுத்து நன்றாக முடி அடர்த்தியாக கருமை நிறத்தில் வளர உதவுகிறது.

* வெந்தயத்தை நன்றாக ஊற வைத்து அரைத்துக் கொண்டு தலைமுடியின் வேர் பகுதியில் தடவி நன்றாக சார்ந்த பிறகு தலைக்கு குளித்தால் முடி கருமையான நிறத்தில் நன்றாக வளரும். அதுமட்டுமில்லாமல் உடல் சூடு, கண் எரிச்சல் போன்றவையும் சரியாகும்.

ADVERTISEMENT

5) குழந்தைகளுக்கு பாட்டி வைத்தியம் || குழந்தைகள் உடல் வலிமை பெறுவதற்கு:

 Patti Vaithiyam:-  தக்காளி மற்றும் கேரட் சாறுடன் 1-டீஸ்பூன் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் நன்றாக சுறுசுறுப்புடனும்,புத்துணர்ச்சியுடனும் மிக வலிமையாக காணப்படுவார்கள்.

இயற்கை வைத்தியம் || பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்:

6) வயிற்றுப்போக்கு சரியாக:

* வயிற்றுப்போக்கு பிரச்சனை உள்ளவர்களுக்கு உடனடியாக சரியாக கொய்யா இலைகளை வெறும் வயிற்றில் நன்றாக மென்று சாப்பிட்டு வரும் வேளையில் வயிற்றுப்போக்கு உடனடியாக சரியாகும்.

* வயிற்று கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசியில் வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, வெண்ணெயுடன் கலந்து குடித்தால் சிறிது நேரத்தில் வயிறு எரிச்சல்,வயிற்றுக் கடுப்புபோன்றவை சரியாகும்.

7) தழும்புகள் மறைவதற்கு:

பாட்டி வைத்தியம்:-  குளிக்கும்போது அந்த தண்ணீரில் சிறிதளவு துளசி இலையை போட்டு குளித்து வந்தால் முகத்தில் உள்ள தழும்புகள் அனைத்தும் மறையும்.

அதுமட்டுமில்லாமல், இரவு தூங்கும் பொழுது முகத்தில் கொஞ்சம் துளசி இலையின் சாறை தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள அனைத்து சரும பிரச்சனைகளும் நீங்கி விடும்.

8) சளி,இருமல் தொல்லை நீங்குவதற்கு:

துளசி இலையை சாராக எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி,இருமல் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

ADVERTISEMENT

9) மூளை வளர்ச்சிக்கு:

 Patti Vaithiyam:-  தூதுவளை இலையை பறித்து அதனை ரசம் செய்து சாப்பாடு அல்லது கசாயம் போல் குடித்தால் மூளை நன்றாக வளர்ச்சி அடைந்து ஞாபக சக்தி அதிகரிக்கும்.

10) வயிற்றுப்புண் குணமடைய:

கீழாநெல்லி இலையை நன்றாக அரைத்துக் கொண்டு அதனை 1-டம்ளர் மோரில் கலந்து காலையில் குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.மேலும்,இரத்த சோகையை குறைத்து, பசியை அதிகரிக்கும்.

11) இரத்த அழுத்தம் சரியாக:

வல்லா கீரை-3, சீரகம் 10-கிராம் போன்றவை எடுத்துக் கொண்டு அதனை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை இரவு தூங்கும் முன்பு சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் சீரான நிலையில் இயங்கும்.

12) கொழுப்புகளை குறைக்க:

 Patti Vaithiyam:-  * உலர வைக்கப்பட்ட ரோஜா இதழ்கள், ஏலக்காய், சுக்கு போன்றவற்றை 100-கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனை அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை, தினமும் காலை-மாலை என இரண்டு வேளையும் 2-கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து இரத்த அழுத்தம் சீராக இயங்குகிறது.

* லவங்கப்பட்டை, வேப்பிலை மற்றும் மிளகு ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை வெறும் வயிற்றில் தினமும் காலையில் 2-கிராம் அளவுக்கு சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைகிறது.

13) உடல் பருமன் குறைவதற்கு:

* வெள்ளை மிளகு, சுக்கு, ரோஜாப்பூ ஆகிய மூன்றையும் ஒரு 40-கிராம் அளவு எடுத்துக் கொண்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு, இவை அனைத்தையும் காலை-மாலை என 2-வேளை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

ADVERTISEMENT

* பூசணி சாறு, அருகம்புல் சாறு, வாழைத்தண்டு சாறு ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து, சருமம் அழகிய தோற்றத்துடன் காணப்படும்.

 Patti Vaithiyam:-  * சுண்டைக்காய் வற்றல், மிளகு, வெந்தயம் ஆகிய மூன்றையும் 50-கிராம் அளவில் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.இதனை,தினசரி காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

* வெள்ளை வெங்காயம், வெள்ளரிக்காய் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு நன்றாக சாராக பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாரை தினமும் குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை போன்ற பிரச்சனைகள் குறையும்.

14) மாதவிடாய் பிரச்சனைகள் சரியாக:

உலர் திராட்சை பழத்தை மிதமான வெந்நீரில் ஒரு 30-நிமிடங்கள் ஊறவைத்து காலையில் சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும். மேலும், இதய நோய்களும் குணமடையும்.

15) இரத்த சோகை சரியாக:

 Patti Vaithiyam:-  * வேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு நன்றாக அரைத்து மிதமான வெந்நீரில் கலந்து குடித்தால் இரத்த சோகை குணமடையும்.

* பூண்டை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொண்டால் Bp போன்ற பிரச்சனைகள் குணமடையும்.இரத்த அழுத்தம் சீரான நிலையில் இயங்கும்.

ADVERTISEMENT

* வேப்பம்பூவை நன்றாக அரைத்த தூள் செய்து 1-டீஸ்பூன் அளவு இஞ்சி சாருடன் கலந்து குடித்தால் அடிக்கடி ஏற்படும் ஏப்பம் சரியாகும்.

Read Also:- வரகு அரிசி பயன்கள்

Leave a Reply