ADVERTISEMENT
Amma Kavithaigal Tamil

Amma Kavithaigal Tamil – அம்மா அன்பு கவிதை

Amma Kavithaigal Tamil-அம்மா அன்பு கவிதை

Amma Kavithaigal Tamil

கோவிலுக்கு செல்லாமல்
கைக்கூப்பி வணங்காமல்
உன் ஆசையை நிறைவேற்றும்
ஒரு தெய்வம் அம்மா!

வானத்தில் உதிக்கும் சூரியனுக்கு கூட
இரவில் ஓய்வுண்டு.
ஆனால் தாய்க்கு என்றுமே
ஓய்வில்லை

என் தாயே
உயிரில் கலந்த உறவே
உன் மடி வேண்டும்
நான் படுத்துறங்க.

அம்மா என் சகலமும் நீ…
அம்மா நான் நிதம் தேடும் உயிர் நீ…
அம்மாவுக்கு நிகர் அம்மா மட்டுமே.

பாலூட்டி சீராட்டி பசி மறந்து
என்னை காத்தாயே!
அம்மா என நான் அழைக்கும்
ஒரு சொல்லுக்கு.

ADVERTISEMENT

நான் வளரும் ஒவ்வொரு நொடியும்
உனக்கு பாரம் தான்,
தெரிந்தும் சுமக்கிறாய்
பத்து மாதம் வரை அல்ல
உன் ஆயுள் காலம் வரை.

Amma kavithai in tamil 10 lines || feeling amma kavithai in tamil

1. தினந்தோறும் பிள்ளைகளை நினைத்து கவலைப்படுவாள். ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலைப்பட மாட்டாள் அம்மா…!!!

2. எதுவும் புரிந்து கொள்ளாத உறவுகள் மத்தியில் நாம் மனதில் என்ன இருக்கு என்று புரிந்து கொள்ளும் ஒரே உறவு “அம்மா” மட்டுமே…!!!

3. வரங்களை கேட்டுக் கொடுக்காத தெய்வங்கள் இருக்கும்போது… தன் பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்று கேட்காமல் கொடுக்கும் உணர்வுபூர்வமான ஒரு தெய்வம்தான் அம்மா…!!!

4. கற்பனைகள் மறைந்து போகும்… காயங்கள் ஆறிப்போகும்…
காலங்கள் மாறி போகும்…
கற்பனைகள் கலைந்து போகும்… ஆனால், என்றுமே மாறாமல் இருப்பது… தாயின் மீது கொண்ட அன்பும் பாசமும் மட்டும் தான்…

5. உலகில் எவ்வளவு தான் தேடித்தேடி சென்றாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் பள்ளியின் வகுப்பறை மற்றும் தான் தாயின் கருவறை…

ADVERTISEMENT

மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள்:

6. நாம் இந்த உலகை பார்க்க வேண்டும் என்பதற்காக…
10 மாதம் வலியையும், வேதனையும் தாங்கிக் கொண்டு…
நம்மை பெற்றெடுக்கும் தருணத்தில் நம்மை மட்டுமே உலகம் என்று பேரானந்தம் கொள்ளும் ஒரே உறவு அம்மா மட்டுமே…

7. பெற்ற பிள்ளை சரியான நேரத்தில் சாப்பிடுகிறானோ என்று ஒவ்வொரு நேரமும் தன்னுடைய பிள்ளைகளுக்காக செலவிட்டு அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்து அவர்களின் மீது அளவு கடந்த அன்பு காட்டும் ஒரே தெய்வம் அம்மா மட்டுமே…

8. உறவுகள் என்று ஆயிரம் பேர் இருந்தாலும்…
நம் துன்பத்தில் வாடி நிக்கும் போது…
நம் கண்ணீருக்கு ஆறுதலாய் இருக்கும் ஒரே உறவு அம்மா மட்டுமே…

9. அழுக வைத்து பார்க்கும் இந்த உறவுகள் மத்தியில்…
நம்மளை அழகுபடுத்தி பார்க்கும் ஒரு உன்னதமான உறவு தான் அம்மா…

10. அம்மா என்ற ஒரு உறவு இல்லையெனில், இந்த உலகமும் ஒரு அனாதை தான்…

Amma kavithai in 2 lines || அம்மா கவிதை 2 வரிகள்:

1. ஆயிரம் உறவுகள் நம் பக்கத்தில் இருந்தாலும்…
அம்மா என்ற ஒரு உறவு இல்லை என்றால்…
இந்த உலகமும் அனாதை தான்…

ADVERTISEMENT

2. இருப்பவன் தொலைப்பதும், இழந்தவன் தேடுவதும் அம்மாவின் அன்பு மட்டுமே…

அம்மா கவிதைகள்

உலகிலேயே சிறந்த தெய்வம்
தாய் மட்டுமே..
உலகிலேயே மிகச் சிறந்தவர்கள்
தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.

ஆரம்பம் முதல் கடைசி வரை மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு, அது அம்மாவின் அன்பு மட்டுமே.

இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு.

மூன்றெழுத்து கவிதை சொல்லச் சொன்னால் முதலில் சொல்வேன் அம்மா என்று.

வாழ்ந்து மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை! மறைந்தாலும் வாழ்வோம் என்பதே வாழ்க்கை!

ADVERTISEMENT

அம்மா என்ற ஒரு உறவு இல்லாவிட்டால் இந்த உலகமும் ஒரு அனாதைதான்.

ஒரே வரம் அம்மா
இந்த வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரே வரம் அம்மா உனக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.

மூச்சுள்ளவரை காப்பேன்
மூச்சடக்கி ஈன்றாய் என்னை என் மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை அம்மா அன்னையர் தின வாழ்த்துகள்.

இறைவன் எனக்கு தந்த முதல் முகவரி உன் முகம் தான் அமோ அன்னையர் தின வாழ்த்துகள்.

காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே
அவளை என்றும்
மனதில் சுமப்போம்.

ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை.

ADVERTISEMENT

இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
தன் அருகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை.

வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்
இன்னும் குழந்தையாக.

மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள்

அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது
வலி நிறைந்தது
என்பதற்காக
யாரும் விட்டுவிடுவதில்லை
தாய்மை.

அன்புகலந்த
அக்கறையோடு சமைப்பதால்
தான் எப்போதும்
அம்மாவின் சமையலில்
சுவை அதிகம்.

நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
அம்மா.

இன்று என்னை
இவ்வுலகுக்கு
அறிமுகம் செய்த
என் அன்பு அம்மாவுக்கு
ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்.

ADVERTISEMENT

நான் உன்னுடன்
இருக்கும் பொழுது
என் பிரச்சனை
எப்போதும் மறந்து
விடுகிறேன் செல்லமே
அம்மா

எதுவும்
அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும்
கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே

உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை

கடல் நீரை
கடன் வாங்கி
கண்கொண்டு அழுதாலும்
நான் சொல்லும்
நன்றிக்கு போதாதம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்

ஒவ்வொரு நாளும்
கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள்
அம்மா

ஆழ்ந்த உறக்கத்தின்
அஸ்திவாரம்
அம்மாவின் தாலாட்டு

ADVERTISEMENT

ஆயிரம் உணவுகள்
வித விதமாக சாப்பிட்டாலும்
அன்னை சமைத்த
உணவுக்கு ஈடாகாது

உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்து
கூறும் முதல்
குருவாக இருப்பவர்
அம்மா மட்டுமே

ஆயிரம் உறவுகள்
உன் மீது அன்பாக
இருந்தாலும்
அன்னையின் அன்புக்கும்
அவள் அரவணைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது

தாய் மடியைக்
காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில்
வேறெதுவும் இல்லை

அம்மா
இந்த நேரத்திலும்
தன்னை பற்றி
கவலைகொள்ளாமல்
நமது ஆரோக்கியத்தில்
அக்கறை கொள்ளும்
அந்த உணர்வு
பாசம் தான்
தாய்மை

உன்னை அணைத்து
பிடிக்கும் போதெல்லாம்
உணர்கிறேன் உலகம்
என் கையில் என்று.

ADVERTISEMENT

இந்த உலகில்
பாசம் எனும்
தீராத ஒளி
பரவி நிற்க
அம்மா எனும்
தீபம் தான்
காரணம்

அம்மா பாசம் கவிதைகள்

ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்
அன்னை என்றொரு
உறவு இல்லாவிடில்
அனாதை தான்
அனைவருமே

தரணியெங்கும்
தேடினாலும்
தாயைப்போல
ஓர் உன்னத
உறவு கிடைக்காது

கோடிகளாலும்
வாங்க முடியாத
ஒரே விசயம்
அம்மாவின் அன்பு

இந்த உலகத்தின் உயிர்மூச்சாய்
அனைத்து உயிர்களின் சுவாசமாய்
வாழ்க்கையின் உயிரோட்டமாய்
பிரபஞ்சத்தின் ஆணிவேராய் இருப்பவள் அம்மா

அம்மா கவிதை 20 வரிகள்

மனிதர்களுள் மேன்மையானவளாய்
தெய்வங்களே வணங்கிடும் தெய்வமாய்
நடமாடும் அழகு தேவதையாய்
அன்பின் திருவுருவமாய் விளங்குபவள் அம்மா

ADVERTISEMENT

பத்துமாதம் தன் பொன் வயிற்றில்
பத்திரமாய் எனை சுமந்து
வலிகள் பல தாங்கி
பத்திரமாய் எனை பெற்றெடுத்தவள் அம்மா

அந்தி பகல் கண் உறங்காது
அவளது உதிரத்தையே பாலாக்கி
தன் வாழ்வைத் துறந்து
எமக்காய் வாழ்பவள் அம்மா

பசி தூக்கம் இழந்து
உற்றார் உறவினரை மறந்து
அவள் நலம் பாராது
தன் குழந்தைகளுக்காய் வாழ்கின்ற தேவதை

தான் அறிவிலியாய் இருந்தாலும்
தன் பிள்ளை உயர்ந்தவனாய் விளங்க
சிறந்தவற்றை எல்லாம் அவனிற்கு அளித்திட
கடினமாய் உழைக்கும் உழைப்பாளி

எங்கே பார்த்தாலும் காதலர்கள்,
என்னை தான்
காதல் செய்ய யாரும் இல்லை என்று
வீடு திரும்பினேன்
காத்திருந்தால் எனக்காக சாப்பிடாமல்
என் அம்மா.

அம்மா மகள் கவிதை வரிகள்

நான் வளரும் ஒவ்வொரு நொடியும்
உனக்கு பாரம் தான்,
தெரிந்தும் சுமக்கிறாய் பத்து மாதம்
வரை அல்ல.. உன் ஆயுள் காலம் வரை.

ADVERTISEMENT

இறைவன் எனக்கு கொடுத்த
முதல் முகவரி
உன் முகம் தான் அம்மா.

பத்து மாதம் சுமந்தாய் வயிற்றில்,
பல வருடங்கள் சுமந்தாய் வாழ்வில்,
இனி என்றுமே சுமக்க நினைக்கிறன்
என் நெஞ்சில் அம்மா.

வயது வித்தியாசம் பார்ப்பதில்லை,
அம்மாவின் கொஞ்சலில் மட்டும்
இன்னும் குழந்தையாக.

நீ ஊட்டிய நிலாச்சோற்றை காட்டிலும்,
வேறு அமிர்தம் நான் கண்டதில்லை
அம்மா.

கண்களை மூடி பார்த்தாலும்,
கண்களை திறந்தாலும், கனவிலும்..
என் அன்னையே..
அவள் எப்போதும் நினைப்பது
என்னையே.

தூக்கத்தில் உன்னைப் பற்றி
நினைப்பவள் காதலி
தூங்காமல் கூட உன்னையே
நினைப்பவள் தாய்.

ADVERTISEMENT

தமிழில் அம்மா என்ற சொல்
எப்படி வந்தது என்று தெரியாது..
ஆனால் அன்பு என்ற சொல் நிச்சயம்
அம்மாவில் இருந்துதான் வந்திருக்கும்.

என்னை நடக்க வைத்து
பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட,
நான் விழுந்து விடக்கூடாது என்ற
கவனத்தில் தான் இருந்தது
உன் தாய் பாசம்.

அம்மா தியாகம் கவிதைகள்

நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
ஓர் உன்னதமான தெய்வம் அம்மா.!

கல்லறையில் உறங்க சொன்னால்
கூட உறங்குவேன்.. அம்மா நீ
வந்து தாலாட்டு பாடினால்.

உலகிலேயே சிறந்த தெய்வம்
தாய் மட்டுமே..
உலகிலேயே மிகச் சிறந்தவர்கள்
தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.!

பத்து மாதம் சுமை, ஒரு மணிநேரம் வலி,
அனைத்தும் மறந்தாள்..
குழந்தையின் முதல் அழுகை
சத்தம் கேட்டதும்.. அம்மா.

முகத்தை காணும் முன்பே
நேசிக்க தெரிந்தவள் தாய் மட்டுமே.

ADVERTISEMENT

நான் பார்த்த முதல் அழகியும் அவளே..
எனது உலக அழகியும் அவளே
என் அம்மா.

உலக அதிசயம் காண ஆர்வமில்லை..
அன்னையே உன்னை கண்ட பின்.

தாய் கவிதை 10 வரிகள்

அம்மா அழகு என்றால் நீ..
அம்மா என்று அழைப்பதில்
அழகும் அழகு பெறுகிறது.

அழுக்கு தேகம், கலைந்த கூந்தல்,
கிழிந்த சேலையிலும் கடவுளாக
தோன்றுகிறாள் அம்மா.

கருப்பை ஒன்றை காதலோடு சுமக்கிறாள்..
வலி என்று தெரிந்தும் வரம் கேட்கிறாள்..
மறுபிறவி பெற்று உனக்கு
உயிர் தருகிறாள் அன்னை.

அன்னையின் அன்பில் அரவணைக்கப்பட்ட
அனைவருமே அன்பானவர்கள்..
அறிவானவர்கள்.. அழகானவர்கள்.!

ADVERTISEMENT

நேசிக்கும் உறவுகள் யாவும்
நம் அம்மா ஆக முடியாது.

வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்
இருந்தாலும் நாம் ரசிப்பது
நிலவை தான்..
பூமியில் எத்தனை பெண்கள் இருந்தாலும்
நம்மை நேசிப்பது பெற்ற தாய் மட்டுமே.

எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல அம்மா
கிடைத்து விடுகிறாள்.. ஆனால்
எல்லா அம்மாக்களுக்கும்
நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை.

துன்பங்கள் வரும் தருணம்
தாயின் மடி சொர்க்கம்.

தாயை வணங்குவோம்
தாய்மையை போற்றுவோம்.

Leave a Reply