ADVERTISEMENT
Triphala Suranam Benifits in Tamil

திரிபலா சூரணம் பயன்கள் || Triphala Suranam Benifits in Tamil

திரிபலா சூரணம் பயன்கள் || Triphala Suranam Benifits in Tamil

Triphala Suranam Benifits in Tamil

Triphala Suranam Benifits in Tamil:

திரிபலா சூரணம் பயன்கள்:  திரிபலா சூரணம் என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கியமான மூலிகை மருந்து தான் திரிபலா சூரணம். இது ஒரு பழங்கால மருத்துவ முறையாகும். இதில் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆன்ட்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளது.

திரிபாலா சூரணம்:

இந்தியாவில் கிடைக்கக்கூடிய மூன்று வகையான பலன்களை ஒன்றாக கலந்து திரிபலா சூரணம் தயாரிக்கப்படுகிறது.

1. நெல்லிக்காய்

2. கடுக்காய்

3. தான்றிக்காய்

ADVERTISEMENT

இவை மூன்று பழங்களையும் ஒன்று சேர்த்து தான் திரிபலா சூரணம் தயாரிக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் நம் உடலில் மூன்று வகையான ஆற்றல்கள் உள்ளது என கூறப்பட்டுள்ளது. இதனால்,இந்த மூன்று பழங்களை கொண்டு சரியான முறையில் திரிபலா சூரணம் பொடியை தயார் செய்வதன் மூலம் பல வகையான நன்மைகளை உடலுக்கு தருகிறது.

திரிபலா சூரணம் பயன்கள் || திரிபலா பயன்கள்:

1. ஆஸ்துமாவை குணப்படுத்த உதவுகிறது:

திரிபலா சூரணத்தை சரியான முறையில் தகுந்த அளவு பயன்படுத்துவதன் மூலம் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.

2. HIV-யை குணப்படுத்துகிறது:

திரிபலா சூரணத்திற்கு “ஹச்.ஐ.வி.ஐ” குணப்படுத்தும் சக்தியும் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.

3. இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது:

திரிபலா சூரணம் பயன்கள்: திரிபலா சூரணத்தில் அதிக அளவு அமிலங்கள் மற்றும் சத்துக்கள் காணப்படுவதனால் கெட்ட கொழுப்புகளை உடம்பில் கரைத்து கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

இதனால், உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் இரத்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது. இது இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு பெரிதும் உதவுகிறது.

4. தோலை பாதுகாக்கிறது:

இதில் அமினோ அமிலங்கள் அதிகளவு காணப்படுவதனால், தோல் செல்களை அனைத்தையும் பாதுகாத்து தோளில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

ADVERTISEMENT

5. இரத்த சோகையை கட்டுப்படுத்துகிறது:

இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திரிபலா சூரணம் பொடியை பயன்படுத்துகின்றனர். இது இரத்த சோகை பிரச்சினைகளில் இருந்து முழுமையாக பாதுகாக்கிறது என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

6. திரிபலா சூரணம் உடல் எடை:

திரிபாலா சூரணத்தை பயன்படுத்துபவர்கள் உடல் எடை குறைவதாகவும் கூறுகின்றனர். இதனால், அதிக எடை உள்ளவர்கள் திரிபலா சூரணத்தை வாங்கி பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. மேலும், இந்த திரிபலா சூரணம் நினைவாற்றலை அதிகளவில் மேம்படுத்தக்கூடிய சக்தி கொண்டது.

7. நீரிழிவு நோயை குணப்படுத்த பயன்படுகிறது:

திரிபலா சூரணம் பயன்கள்:  டைப்-2 என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி இந்த திரிபலா சூரணத்திற்கு உண்டு. இதில், ஏராளமானோர் குணமடைந்துள்ளனர் என ஆயுர்வேத மருத்துவங்கள் கூறுகின்றது.

8. கல்லீரை பாதுகாக்க உதவுகிறது:

கல்லீரல் அலர்ஜி, கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் திரிபலா சூரணம் பொடியை தகுந்த அளவில் பயன்படுத்தி வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமடையும்.

9. முடி கருமையாக இருக்க உதவுகிறது:

திரிபலா சூரணம் பயன்கள்:  திரிபலா சூரணம் பொடி இளமையாக இருக்க பெரிதும் உதவுகிறது.அது போன்று முடி நன்றாக வளரவும் இளம் நரை வராமல் தடுக்கவும் உதவுகிறது.

10. திரிபலா சூரணம் ஆண்மை:

திரிபலா சூரணத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இருப்பதனால் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவு தருகிறது. இது இளமையாக இருக்க பெரிதும் உதவுகிறது.

ADVERTISEMENT

ஆண்மையை அதிகரிக்க திரிபலா சூரண பொடியை தினமும் இரவில் பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு பசும்பால் குடித்து வந்தால் ஆண்களுக்கு ஆண்மை பெருகும்.

11. திரிபலா சூரணம் மாதவிடாய்:

திரிபலா சூரணம் பயன்கள்: திரிபலா சூரணத்தை பல்பொடியாகவும் பயன்படுத்தலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் அதிகளவு இரத்த போக்கை கட்டுப்படுத்துவதற்கு இந்த திரிபலா சூரணம் பயன்படுகிறது.

இந்த திரிபலாவை அளவுக்கு மேல் எடுத்துக் கொண்டால் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Triphala Suranam Benifits in Tamil:

திரிபலா சூரணம் எப்போது சாப்பிட வேண்டும்:

திரிபலா சூரணத்தை 2-ஸ்பூன் அளவு தண்ணீரில் நன்றாக கலக்கி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மிகவும் நல்லது. உடல் எடையை நாம் குறைப்பதற்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

திரிபலா சூரணம் தொடர்ந்து சாப்பிடலாமா:

திரிபலா சூரணம் பயன்கள்: திரிபலா சூரணத்தை நாம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. திரிபலா பொடி சருமத்தின் அழகை அதிகரித்து இளமையாக இருக்க பெரிதும் உதவி செய்கிறது. இந்த திரிபலா சூரணத்தை தினமும் பயன்படுத்துவதனால் தோளில் சுரக்கங்கள் ஏற்படுவதில்லை.

திரிபலா சூரணம் எப்படி சாப்பிடுவது:

• குளிர்காலங்களில் திரிபலா பொடி நெய்யுடன் கலந்து சாப்பிட வேண்டும். இது வாய்ப்புண் மற்றும் அதில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய உதவுகிறது.

ADVERTISEMENT

• பனிக்காலங்களில் திரிபலா பொடியை தேனுடன் கலந்து சாப்பிடுவது நல்லது.

• மழைக்காலங்களில் திரிபலா பொடியை வெந்நீரில் கலந்து குடிப்பது மிகவும் சிறந்தது.

Triphala Suranam Benifits in Tamil:

திரிபலா சூரணம் யார் சாப்பிடக்கூடாது:

குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த திரிபலா சூரணத்தை பயன்படுத்தக் கூடாது. சிறு குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கூட மருத்துவரின் ஆலோசனை பெற்று கொடுப்பது மிகவும் சிறந்தது.

திரிபலா சூரணம் பக்க விளைவுகள் || திரிபலா சூரணம் தீமைகள்:

• திரிபலா சூரணத்தை அதிகளவு பயன்படுத்துவதன் மூலம் இது வாய்வு பிரச்சனையை அதிக அளவு உண்டாகிறது.

• உடம்பில் செரிமானங்கள் நடைபெறுவதையும் தாமதப்படுத்துகிறது.

• அதுமட்டுமில்லாமல், இந்த திரிபலா சூரத்தை அதிகளவு எடுத்துக் கொள்ளும் போது கடுமையான வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, இரப்பை குடல் பிரச்சனை போன்ற பல்வேறு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ADVERTISEMENT

மருத்துவ குறிப்பு:

திரிபலா சூரணம் எப்படி சாப்பிட வேண்டும்?

திரிபலா சூரணம் பயன்கள்: திரிபலா சூரணம் பொடியை பயன்படுத்தும் நபர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2-முதல் 6-கிராம் வரை திரிபலா சூரணம் பொடியை எடுத்துக் கொள்ளலாம். சரியான திரிபலா சூரணத்தை தேர்வு செய்து அதனை உறுதி செய்து வாங்க வேண்டும். இல்லையெனில் பக்க விளைவுகள் ஏற்படும். இது மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது.

திரிபலா பொடி என்றால் என்ன?

திரிபலா பொடி என்பது கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் கலந்த மருந்து பொருளாகும். இது நாட்டு மருந்து கடைகளில் அதிக அளவு கிடைக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

Read Also:-  நவதானியங்கள் பெயர்கள் மற்றும் பயன்கள்

Leave a Reply