ADVERTISEMENT
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்

மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் || How To Get Periods In Single Day

மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்

மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்

மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் || How To Get Periods In Single Day

மாதவிடாய் என்றால் என்ன:

மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்: பெண்களுக்கு உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் ஒவ்வொரு மாதமும் சரி செய்யக் கூடியது இந்த மாதவிடாய் ஆகும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் பெண்கள் தங்களுடைய உடல்களை தனக்குத்தானே சுத்தம் செய்து கொள்கின்றனர்.

தற்போது உள்ள காலகட்டத்தில் சுற்றுப்புற சூழல் மற்றும் உணவு அல்லது ஒழுங்கற்ற வாழ்க்கை காரணமாக இந்த மாதவிடாய் ஆனது ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணிற்கு சரியாக வருவதில்லை.

மாதவிடாய் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நடக்க வேண்டும்:

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் ஆனது 28 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் ஏற்பட்டாக வேண்டும். அவ்வாறு அது நடைபெறாமல் இருந்தால் உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படும். உதாரணமாக உடலில் ரத்தம் குறைந்து காணப்படுதல் மற்றும் PCOD போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்:

இத்தகைய பிரச்சனைகளை கீழே சொல்லப்பட்டுள்ள மருந்துகள் மூலம் எளிமையாக மாதவிடாய் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு வருமாறு எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

(கீழே சொல்லப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் முறையான முறையில் செய்தால் மட்டுமே இதற்கு பலன் கிடைக்கும்)

1. பொதுவாக மாதவிடாய் பிரச்சனை ஆனது எந்த ஒரு வேலையும் செய்யாமல் வீட்டிலேயே சும்மா இருக்கும் பெண்களுக்கு வராமல் இருக்கும். எனவே தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் எளிமையாக மாதவிடாய் வர வைக்கலாம்.

2. குறிப்பாக நீங்கள் செய்யும் எக்சர்சைஸ் ஆனது உங்கள் வயிற்றுப் பகுதியை மட்டுமே குறி வைத்ததாக இருக்க வேண்டும்.

3. எனவே நின்று கொண்டிருந்தபடியே உங்கள் கைகளையும் கால்களையும் அசைத்துக் கொண்டே தாண்டிக் கொண்டே ஒரு ஐந்து நிமிடத்திற்கு எக்சர்சைஸ் செய்தால், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் மாதவிடாய் ஆனது நிச்சயம் நடைபெறும்.

பழங்கள் சாப்பிடுவதால் மாதவிடாய் வர வைக்கலாம்:

• பொதுவாக பப்பாளி மற்றும் அண்ணாச்சி இவை இரண்டிற்கும் உடலில் உள்ள தேவையற்ற சக்திகளை வெளியேற்றக் கூடிய தன்மை உண்டு.

• எனவேதான் பப்பாளி மற்றும் அன்னாசி பழம் தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் போதும் உடனே மாதவிடாய் வந்துவிடும்.

ADVERTISEMENT

• ஒரு சில செய்திகளை நான் கேட்டதுண்டு, கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பப்பாளி மற்றும் அண்ணாச்சி பழத்தை சாப்பிட்டால் கர்ப்பம் கலைந்து விடும் என்பதுதான் அது.

• அந்த அளவிற்கு பப்பாளி மற்றும் அண்ணாச்சி பழத்திற்கு சக்தி உண்டு. எனவே ஒரு முழு பப்பாளி அல்லது ஒரு முழு அண்ணாச்சி பழத்தை மூன்று நேரமும் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் மூன்றாவது நாள் நிச்சயம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும்.

எளிமையான முறையில் மாதவிடாய் வர வைப்பது எப்படி:

எடுத்துக்கொள்ள வேண்டிய பொருட்கள்:

எலுமிச்சம் பழம் , ஒரு வெங்காயம் மற்றும் சிறிதளவு ஓமம்.

• முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் இரண்டில் ஏதேனும் ஒன்றை சிறிதளவு வெட்டி போட்டு தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.

• சிறிது நேரத்தில் வெங்காயம் கொதிவந்தவுடன் அதனுடன் ஓமம் பொடி ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

• இரண்டும் நன்றாக காய்ச்சிய பிறகு பின்னர் அந்த தண்ணீரை ஒரு வடிகட்டியை வைத்து வடிகட்ட வேண்டும்.

• சிறிது நேரம் ஆரம்பித்து விட்ட பிறகு எலுமிச்சம் பழத்தை இரண்டாக அறுத்து அந்த வடிகட்டிய தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

• இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரவு தூங்கும் போது குடிக்கலாம்.

பொதுவாக மாதவிடாய் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை வரும்:

1. பொதுவாக ஒரு மாதம் மாதவிடாய் முடிந்த பிறகு அடுத்த மாதம் வரக்கூடிய மாதவிடாய் நாட்களுக்கு பத்து அல்லது 18 நாட்கள் வரை வித்தியாசம் இருப்பது சகஜம் தான்.

2. மேலும் சிலருக்கு உதாரணமாக இன்று மாதவிடாய் நடக்கிறது என்றால் அடுத்த 15 நாட்களிலேயே வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

(இவை அனைத்தும் அனைத்து பெண்களுக்கும் வருவதில்லை, இதனால் எந்த வித பிரச்சனைகளும் ஏற்படாது)

ADVERTISEMENT

3. புதிதாக பூப்படைந்த பெண்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை வருவது இயற்கை. ஆனால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் 28 நாட்களுக்கு இருந்து 30 நாட்களுக்குள் வருவது சீராகிவிடும்.

மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய சிரமங்கள்:

1. பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் தினம் அல்லது மாதவிடாய் வரப்போகிறது என்றால் மிகவும் எரிச்சலான ஒரு விஷயமாக இருக்கும்.

2. ஏனென்றால் அப்போது ஏற்படக்கூடிய வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு தான் இதற்கு காரணம்.

3. இவ்வாறு ஏன் நடக்கிறது என்றால் கர்ப்பப்பையானது சுருங்கி விருந்து அதற்குள் இருக்கும் கெட்ட ரத்தப்போக்குகள் அனைத்தும் வெளியேற்றி விடும்.

4. இவ்வாறு மாதம் ஒரு பெண்ணின் உடலில் ஏற்படுவதால் தான் பெண்கள் எந்தவித நோய்களும் இல்லாமல் நன்மையுடன் இருக்க முடிகிறது.

மாதவிடாயை முன்கூட்டியே வர வைப்பது சரியா:

ஆம், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாமல் எப்போதாவது ஒருமுறை செய்வது சரியான விஷயமாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT

ஏனென்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் வரப்போகும் முக்கியமான விசேஷங்கள் மற்றும் கோவிலுக்கு செல்லுதல் போன்ற விஷயங்கள் இந்த மாதவிடாயால் தடை ஏற்படக்கூடிய ஒன்றாகும்.

எனவே, மருத்துவரின் ஆலோசனையுடன் மாத்திரைகளை உட்கொள்வதால் எதிர்காலத்தில் வரக்கூடிய மாதவிடாயை அன்றே வர வைக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

Read Also: Historytamil

Leave a Reply