ADVERTISEMENT
Kolaru Pathigam lyrics in Tamil

கோளாறு பதிகம் பாடல் – Kolaru Pathigam lyrics in Tamil | Kolaru Pathigam History Tamil

 கோளாறு பதிகம் பாடல் – Kolaru Pathigam lyrics in Tamil | Kolaru Pathigam History Tamil

Kolaru Pathigam lyrics in Tamil

Kolaru Pathigam lyrics in Tamil:- நாம் எல்லோருக்கும் ஒவ்வொரு கிரகங்கள் இருக்கும் அதிலேயே நவக்கிரங்கள் நமக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை நீக்கவும், நம் ஆயுள் பலன் கூடவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம். கோளாறு பதிகம் பாடல் வரிகள் வரலாறு பாடலின் கோளாறு பதிகம் பற்றிய பதிவு இங்கே உள்ளன.

பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டம் மூன்றாம் திருமுறைகளாக உள்ளது. இவற்றில் இரண்டாம் திருமுறையில் இருக்கும் பதியங்கள் ஒன்றான கோளாறு பதிகம் என்று அழைக்கப்படுகிறோம்.

Kolaru Pathigam lyrics in Tamil – ஜோதிட சாஸ்திரம்:

Kolaru Pathigam lyrics in Tamil:- இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி நடைபெறுகின்றது. சனி கிரகத்தின் அதிதேவதை ஒருவர் ஆசியிடம் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதே சனிப்பெயர்ச்சி என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறப்படுகின்றன. என்னை சனிப்பெயர்ச்சி நடக்கும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் முதலில் சின்ன சின்ன பிரச்சனைகள் தீமைகள் ஏற்படும் அதன் பின்னர் நன்மைகள் அளிக்கக்கூடும்.

இந்த சனி பெயர்ச்சி போது நமக்கு ஏற்படும் துன்பங்கள் இருந்து விலக கிரக வழிபாட்டுக்கு மற்ற அனைத்து காரியங்களும் நாம் செய்துள்ளோம். நமது குல தெய்வங்கள் வழிபடுவது, ஒன்பது நவக்கிரங்களுக்கு விளக்கு ஏற்றுவது, நமக்கு பிடித்த கற்களை மோதிரம் செய்து போட்டுக் கொள்வது, இப்படி செய்தால் இந்த சனி கிரக தோஷத்தில் இருந்து நாம் விலகி செல்ல முடியாது.

இந்த சனி கிரக தோஷங்கலில் இருந்து நாம் விலகி செல்ல வேண்டும் என்றால். திருஞானசம்பந்தர் பாடியுள்ள கோளாறுப்படிக்கும் பாடல்களை நாம் தினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம சனியின் நிச்சயமாக குரைத்துகொள்ளலாம். திருஞானசம்பந்தர் அருளிய கோளாறு பதிகம் ஒவ்வொரு பாடல்களின் பொருள்களும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.ஜோலார்பயத்தின் 11 பாடல்களின் படங்களையும் நாம் கீழே படித்து தெரிந்து கொள்வோம்

ADVERTISEMENT

கோளறு பதிப்பகம் முதல் பாடல்:

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:

இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.

கோளறு பதிப்பகம் இரண்டாவது பாடல்:

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

பொருள்:

Kolaru Pathigam lyrics in Tamil:- அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.

 கோளறு பதிப்பகம் மூன்றாம் பாடல் :

உருவளர் பவளதெடின யளி
நீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தெ னுளமே புகுந்த வதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

பொருள்:

செல்வக் கடவுளாகிய திருமகள், காக்கும் தெய்வமான துர்க்கை, உலகின் எட்டுத் திசை ஆளுகின்ற அஷ்டதிக் பாலகர்கள், பூமியை ஆளுகின்ற பூமாதேவி ஆகிய தெய்வங்கள் சிவபெருமானின் ஆணைக்கு உட்பட்டு இயங்குவதால் பக்தர்களுக்கு நன்மையே புரிவார்கள் எனவும், அவர்களுக்கு செல்வங்களும் இன்னபிற இன்பங்களும் முறையே வந்துசேரும் எனவும் இந்த பாடல் வரி கூறுகின்றது.

ADVERTISEMENT

 கோளறு பதிப்பகம் நான்காம் பாடல்:

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:

Kolaru Pathigam lyrics in Tamil:- சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.

கோளறு பதிப்பகம் ஐந்தாம் பாடல்:

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:

கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.

Kolaru Pathigam lyrics in Tamil – கோளறு பதிப்பகம்  ஆறாம் பாடல்:

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:

சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இ…

ADVERTISEMENT

 கோளறு பதிப்பகம் ஏழாம் பாடல்:

செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:

வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.

கோளறு பதிப்பகம் எட்டாம் பாடல்:

வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:

கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.

 கோளறு பதிப்பகம் ஒன்பதாம் பாடல்:Kolaru Pathigam lyrics in Tamil

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

ADVERTISEMENT

பொருள்:

நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.

கோளறு பதிப்பகம் பத்தாம் பாடல்:

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்

தமிழ் என்பதன் அர்த்தம்

பொருள்:

புத்த மதத்தவரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான வெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.

 கோளறு பதிப்பகம் பதினோறாம் பாடல்:

தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!

பொருள்:

Kolaru Pathigam lyrics in Tamil – இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.

Leave a Reply