ADVERTISEMENT
அதிமதுரம் பயன்கள்

அதிமதுரம் பயன்கள் || Athimathuram Benifits in Tamil

அதிமதுரம் பயன்கள் || Athimathuram Benifits in Tamil

அதிமதுரம் பயன்கள்

Athimathuram Benifits in Tamil:

அதிமதுரம் பயன்கள்: அதிமதுரம் என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். இது ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது நல்ல வாசனையாகவும், இதனுடைய வேர் இனிப்புடன் காணப்படும்.

இந்த அதிமதுரத்தின் வேர் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் இந்த அதிமதுரம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. உடலில் உள்ள வைரஸ் கிருமிகளை எதிர்த்து போராட கூடிய தன்மை இந்த அதிமதுரத்திருக்கு அதிகளவு உள்ளது.

இந்த அதிமதுரத்தின் பயன்களையும், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

அதிமதுரம் பயன்கள்:

1. கண் எரிச்சல் குணமாக:

கடுக்காய், திப்பிலி, மிளகு, அதிமதுரம் சேர்த்து நன்றாக வருத்து பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை, நெய்யில் கலந்து சாப்பிட்டால் கண் எரிச்சல் குணமடையும். கண் குளிர்ச்சியாக காணப்படும்.

2. உதிரப்போக்கு நிற்பதற்கு:

ADVERTISEMENT

கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பாக ஏற்படும் உதிரப்போக்கு பிரச்சனைகளுக்கு அதிமதுரம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

இதனால், கருவுற்ற பெண்கள் அதிமதுரம் மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 10-கிராம் போடியை 100-மில்லி நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து 50-மில்லி வரும் வரை சுண்டி அது வடிகட்டி காலை நேரத்தில் தொடர்ந்து 3-நாட்கள் அதனை குடித்து வந்தால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக ஏற்படும் உதிரப்போக்கு நீங்கும்.

3. தொண்டை பிரச்சனை சரியா:

அதிமதுரம் பயன்கள்: அதிமதுரத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. இதில், ஒரு துண்டை வாயில் அடக்கி கொண்டு உமிழ் நீரை விழுங்கினால் தொண்டை கரகரப்பு, தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி தொண்டையில் உள்ள சளிகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

4. மூட்டு வலி குணமடைய:

தீராத மூட்டு வலிக்கு இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயத்தை குடிப்பதன் மூலம் நீங்கா மூட்டு வலிகள் அனைத்தும் நீங்கிவிடும்.

5. சுகப்பிரசவம்:

கர்ப்பமடையும் பெண்கள் அனைவரும் நினைக்கும் ஒரே விஷயம் பிரசவ காலங்களில் தனக்கு சுகப்பிரசவமாக வேண்டும் என்று தான். ஆனால், அனைவருக்குமே சுகப்பிரசவம் ஆவது கிடையாது. சிலருக்கு சிசேரியன் சிகிச்சையின் மூலம் குழந்தை பிறக்கும்.

கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலங்களில் தேவாரம் மற்றும் அதிமதுரம் இவை இரண்டையும் 40-கிராம் அளவில் பொடி செய்து அதனை, வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து பிரசவ வலி தொடங்கிய உடன் இரண்டு முறை சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஏற்படும்.

ADVERTISEMENT

6. வயிற்றுப்புண் குணமடைய:

அதிமதுரம் பயன்கள்: அது மரத்தின் கொடியை தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும் பின்பு அடுத்த நாள் காலையில் அரிசி கந்தியுடன் சேர்த்து அந்த நீரை பருகினால் வயிற்றுப்புண் குணமடையும்.

இதுமட்டுமில்லாமல், வயிறு எரிச்சல், மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அதிமதுரத்தை பொடியாக எடுத்துக் கொள்வது சிறந்தது.

7. சிறுநீர் பிரிவதற்கு:

நம் உடலுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ, அதுபோன்றுதான் நம் இரு சிறுநீரகங்களையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இதில் ஏராளமான தொற்றுகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

குறிப்பாக, சிறுநீரகத்தில் கல் உருவாகும் நிகழ்வு அதிகளவு காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. இதற்கு அதிமதுரத்தை பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

8. அதிமதுரம் ஆண்மை:

அதிமதுரம் செய்த தூளை தினசரி காலை, மாலை என இரண்டு வேலைகளையும் ஆண்கள் எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இந்த அதிமருதத்தை ஊற வைத்தும் நாம் சாப்பிடலாம்.

ஆண்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சினைகளான ஆண்மை குறைவு, ஆஸ்துமா, இளநரை போன்ற பல்வேறு பிரச்சனைகளை இதன் மூலம் குணப்படுத்தலாம்.

ADVERTISEMENT

9. தலைமுடி உதிர்வதற்கு:

அதிமதுரத்தை நன்றாக பொடி செய்து பசும்பாலில் கிட்டத்தட்ட 1-மணி நேரம் ஊற வைத்து அதனை தலையின் முடிவேரிகளில் நன்றாக தேய்த்து 2-மணி நேரம் கழித்து குளித்து வரும் வேளையில் தலைமுடி பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

தலையில் ஏற்பட்டுள்ள சிறு சிறு புண்கள், பொடுகுகள் போன்றவையும் குணமடைந்து நரைமுடியும் கருமை நிறமாக மாறும்.

athimathuram benifits for skin in tamil:

10. அதிமதுரம் பயன்கள் முகம் || அதிமதுரம் அழகு குறிப்புகள்:

அதிமதுரம் பயன்கள்: அதிமதுரம் ஒரு குளிர்ச்சியான மருத்துவ பொருள். அதனால், இதை சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்க மிகவும் துணை புரிகிறது. தோல் வறண்ட சருமத்தை கொண்டிருப்பவர்கள் அதிமதுரம் பேஸ்ட் பேக் பயன்படுத்துவதன் மூலமாக சருமத்தை ஈரப்பதமாக எப்போதும் வைத்திருக்க உதவுகிறது.

சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை தடுக்க மிகவும் உதவி செய்கிறது. மேலும், இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

அதிமதுரம் வேறு பெயர்கள்:

1. அதிகம்

2. மதுகம்

ADVERTISEMENT

3.அட்டி

4.லிகோரைஸ்

அதிமதுரம் பொடி:

அதிமதுரம் பயன்கள்: தேன் கலந்து அதிமதுரம் பொடியை உதடுகளில் தடவினால் வாய்ப்புண்கள் போன்ற பிரச்சனைகள் குணமடையும். அதுமட்டுமில்லாமல், வயிற்று புண்கள், வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்ற இரப்பை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் அமைகிறது.

அதிமதுரம் தீமைகள்:

• அதிமதுரத்தால் செய்யப்பட்ட உணவுகளை நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது. இதை சாப்பிடுவதன் மூலமாக, நுரையீரலில் அதிகப்படியான திரவம் தேங்க வாய்ப்புள்ளது. இதனால், ஏராளமான பிரச்சனைகள் உடம்பில் ஏற்படலாம்.

• உடம்பில் உள்ள பொட்டாசியத்தின் அளவை குறைக்கிறது. இதனால், தலைவலிகள் அதிகளவு ஏற்படும் என மருத்துவ ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

• தசை சுருக்கம் மற்றும் உடம்பில் எந்தப் பகுதியிலும் வீக்கம் ஏற்படும்.

ADVERTISEMENT

• ஒவ்வாமை காரணமாக சிலருக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், உடல் உறுப்புகள் செயல் இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

• இதனால், உடல் சோர்வு ஏற்படுகிறது. அதன் காரணமாக, உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

• அதிகளவு அதிமதுரம் எடுத்துக் கொள்ளும் பொழுது இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்பட்டு இதயம் செயலிழக்கவும் நேரிடும்.

• பெண்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்க நேரிடும். அதுமட்டுமில்லாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்பட அதிக அளவு வாய்ப்புள்ளது.

அதிமதுரம் சாப்பிடும் அளவு:

அதிமதுரம் பயன்கள்: அதிமதுரத்தில் “லிக்கோரைஸ்” என்ற வேதிப்பொருள் தனித்து காணப்படுகிறது.இந்த லிக்கோரைசை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய உணவுப் பொருள்கள் இந்த உலகில் அதிக அளவில் உள்ளது.

இதுபோன்ற உணவுகளை நாம் உட்கொள்ளும் பொழுது நம் உடம்பில் “கிலைஸரிசிக்”எனும் வேதிப்பொருள் அதிக அளவு சுரக்க காரணமாக இருக்கிறது. இந்த ‘கிலைஸரிசிக்’ வேதிப்பொருள் நம் உடம்பில் அதிக அளவு சுரப்பதினால் “கார்டிசால்” எனப்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகளவு உற்பத்தி அடைகிறது.

ADVERTISEMENT

இதனால, நம் உடம்பில் உள்ள தாது உப்புகளின் அளவு வேறுபாடு அடைகின்றது. அதன் காரணமாகத்தான் அதிமதுரத்தை அளவோடு நாம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மருத்துவ குறிப்பு || chitharathai benifits in tamil:

அதிமதுரம் எப்படி சாப்பிடலாம்? || அதிமதுரம் சாப்பிடும் முறை:

அதிமதுர பொடியை 1-4 கிராம் அளவு எடுத்து 100-மில்லி தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதனை, வடிகட்டி கசாயமாக குடிக்கலாம்.

மாத்திரையாக நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது 760 முதல் 1520 மைக்ரோ கிராம் வரை மட்டுமே சாப்பிடுவதற்கு முன்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மருத்துவரின் ஆலோசனைப்படி 8 முதல் 16-வாரங்கள் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதிமதுரம் பொருள் என்ன?

அதிமதுரம் பயன்கள்: அதிமதுரத்துக்கு மதுகம், அதிகம், அட்டி ஆகிய மற்ற பெயர்களும் உண்டு. இதில் இனிப்பு சுவை அதிகமாக காணப்படுவதனால், அதிமதுரம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இனிப்பு வேர் என்ற சொல்லைக் குறிக்கும் விதமாக இது காணப்படுவதால், “லிகோரைஸ்” என்னும் பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

Read Also:- திரிபலா சூரணம் பயன்கள்

ADVERTISEMENT

Leave a Reply